மயிலிட்டி டொட் கொம் இன் நண்பர்களுக்கான திறந்த வெளி விருந்து. விளையாட்டுப்போட்டிகள் வாண வேடிக்கையுடன் மிகவும்சிறப்பாக நடைபெற்றது வந்து கலந்துகொண்டவர்களுக்கு மயிலிட்டி டொட் கொம் தனது நன்றியை தொவித்துக்கொள்கின்றது.
மயிலிட்டி டொட் கொம் இன் வளர்ச்சிக்கு பல நாடுகளிலிருந்து உதவியவர்களுக்கும், எம்முடன் தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கும் இணையத்தளத்தை மிகவும்சிறப்பாக வடிவமைத்து தொடர்ந்து எமக்காக இணையத்தள வேலைகளை செய்துவரும் நண்பர் குமார் அவர்களுக்கும் மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது.
கோடைகால விடுமுறையை கழிக்க மயிலிட்டி சிறுவர்களுக்காக கடற்கரைக்கு நான்காவது தடவையாக செல்லவிருப்பதால் சேர்ந்து போகவிரும்புபவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.
அனைத்தும் இலவசம்
மயிலிட்டி மக்களிற்கு
எம்மால் உருவாக்கப்பட்டசங்கம் ஒரு குழந்தைபோல் அது உருவாகி பிரசவித்து தவண்டு நடந்து படித்து பல பட்டங்கள், பரிசில்கள் பெற்று பெரியவளர்ச்சியில் வளர்த்துவிட்டது ஆனால் மூன்று குடும்பங்கள் தங்கள் சொந்த லாபத்திற்கு அதை பயன்படுத்த வெளிக்கிட்டு மயிலிட்டி மக்கள் செல்லாததால் இன்று பல வெளியூர்க்காறர்களால் நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றது எமது குழந்தை இப்படி அழிந்து போவதை நாம் விரும்பவில்லை, இன்னுமொரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கவும் நாம் விரும்பவில்லை ஏனென்றால் அந்த வலி எமக்குத்தான் தெரியும், அந்த மூன்று குடும்பத்துக்கும் தெரியாது.
எமது பொறுமையை இழக்கவைக்கின்றார்கள், நல்லவர்களிள் பெயர்களை மூன்று குடும்மும் சேர்ந்து கெடுக்கின்றார்கள். இந்த மூன்று குடும்பம் இருக்கும் வரை மயிலிட்டி சங்கம் முன்னேற்றம் அடையமுடியாது. மேலும் முழு விபரம் ஆதாரத்துடன் விரைவில் மயிலிட்டி மக்களின் பார்வைக்காக இங்கே போடப்படும். முக்கியமாக நாம் ஒவ்வொரு வீடாக எடுத்து விளக்கம் அளிக்கமுடியாது அதனால்தான் இந்த முடிவு. இதற்கு முதல் சில கேள்விகளுக்கு விடை தேடுங்கள் நியாயம் எங்கே உள்ளது என்று தெரியும், விளங்கும்!
1. மயிலிட்டி சங்கத்தை உருவாக்க முடிவு எடுத்தது யார் ?
2. மயிலிட்டி சங்கத்தை அரசங்கத்தில் பதிவு செய்தது யார் ?
3. சின்னம் ( லோகோ ) உருவாக்கியது யார் ?
4. மயிலிட்டி சங்கத்தை உலகறியச் செய்தது யார் ?
5. மயிலிட்டி டொட்கொமை யார் எடுத்து பதிவுசெய்தது ?
6. பானர் செய்தது யார் ?
எமக்கு அனுப்பப்படும் EMAIL கடிதங்கள் தேவை ஏற்படின் பார்வைக்காக இங்கே போடப்படும் என்பதை அறியத்தருகின்றோம். எமக்கு அனுப்பப்படும் EMAIL கடிதங்களுக்கு அனுப்புபவர்களே பொறுப்பானவர்கள் மயிலிட்டி டொட்கொம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்கமாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
மயிலிட்டி டொட்கொம் பொதுவான சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றது. பொதுவான சட்டத்தை எந்தவிதத்திலும் மீறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.