நினைவுகளாய்
ஆழ்கடலை ஆர்ப்பரித்து பாட்டிசைக்க
மாலைக்கதிரவன் வானில் பல மாயம் புரிகையில்
மேக நெற்றியில் வட்டப்பொட்டென
நிலா மகள் வந்து விட
நிலாச் சோறு உண்ட காலம்
சொர்ப்பணமாய் மாறியதேன் ?
பிறந்ததும் மிகக்கற்றுத்தெளிந்ததும்
இழந்த தமிழ் பண்பினை போற்றி
வாழ்ந்த மண்மீது கொண்டகாதல் தேயாது,
மலரும் நினைவுகளாய் வந்தது என் நினைவில்
வாழ வழியின்றி தினம் வடுவோர்
வளம் கண்டது என் ஊரில்...
வளநிறை நல்மயிலை தலைநிமிர்
தானென்று ஆங்காரமாய் நின்ற நாள் என்னமோ
இன்று ஊர்திகளின் அணிவகுப்பில்
நசுங்குண்ட நங்கை போல
உடம்பெல்லாம் உரசலிலே எரிவுகண்டு
பிணம்தின்னி கழுகுகளின் உறைவிடமாய்
கோலமிழந்து உனை இழந்தாய்
கனா ஒன்று நான் கண்டேன்
முன்போல எழில் மயமாய் எனை அழைக்க
நானும் வருவதாய்த்தான் சொல்லி இருந்தேன்
அது உனக்கும் எனக்கும் தூரம் கொஞ்சமென நினைத்தேன்
இது வெடிகளின் ஒசைகளின்பின்
ஆனால் உன்னை புத்தன் பூமி என்றல்லவா சொல்கிறார்கள்
அப்ப சித்தன் சொன்னான் நீ எங்கள் பூமி என்று
பொறுத்திரு வருவோம் அழிந்திடும் இடைவெளியெல்லாம்
வருவோம், நாம் இனி தணியோம்
ஆளான நாள் முதலாய் ஆன வதை போதுமம்மா
மயிலை உன் வாடகை இல்லா வசந்தத்தை வசீகரிக்க
உன் சேய்களாய்
திருமதி உமை ஜெயறட்ணம் |