எம் மண் வாசனை இணையமெங்கும் நுகர வகை செய்வோம்
நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக மயிலிட்டி மக்கள் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருகின்றபோதும் நாங்கள் பிறந்த கிராமத்தில் காலணிகள் இல்லாமல் ஓடிவிளையாடிய மண்ணை மயிலிட்டி என்ற பெயரை அனைவரின் மனங்களில் இருந்தும் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிற்காகவும் எமது அடுத்த சந்ததியினருக்காகவும் இவ் இணையத்தில் மயிலிட்டியின் வரலாறு. மயிலிட்டி ஒன்றியங்களின் நிகழ்வுகள், மயிலிட்டி தொடர்பான புகைப்படங்கள். மயிலிட்டி ஆலயங்கள். பாடசாலைகள். மயிலிட்டி சம்பந்தமான நிகழ்வுகள், மாவீரர்கள். மயிலிட்டி மக்களின் முன்னேற்றத்திற்கு அது சார்ந்த அனைத்து நாட்டுமக்களையும் ஒன்றிணைக்கும் இணையமாகவும், குறிப்பாக மயிலிட்டி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மயிலிட்டி டொட் கொம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மயிலிட்டி தொடர்பான தகவல்களை எல்லா நாடுகளிலும் வாழ்பவர்கள் எமக்கு அனுப்பி உதவி செய்வதின் மூலம் இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒன்றே செய்யினும்
நன்றே செய்வாய் அதை
எப்படியும் செய்வாய்
மயிலிட்டி வளர்ச்சிக்கு
நன்றி
|