மயிலிட்டியில் நாம் பிறந்ததிற்கு பெருமைப்படவேண்டும் சாதனையாளர்கள் வரிசையில் அடுத்து வருபவர் கருணாநிதி கெளதமன் இவர் எமக்கு பல வழிகளில் பெருமை சேர்த்துள்ளார். முதலாவதாக செருப்பு குறும் திரைப்படத்தை தயாரித்து பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இத்திரைப்படம் பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றதாக கேட்டு, பார்த்து அறிந்திருந்தோம், இதற்கு சொத்தக்காறர் மயிலிட்டியின் மகன் என்று அறியும்போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது. இவர் வேறு குறும்திரைப்படமும் தயாரித்துள்ளார். விரைவில் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார் அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளர், இவரின் அனைத்து ஆக்கங்களும் விபரமாக வரைவில் அறியத்தருவோம். இவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற்று பெற்றோருக்கும், மயிலிட்டிக்கும் மென்மேலும் பெருமைசேர்க்க வேண்டும் என்று மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது. நன்றி
செல்வன் மதன் சற்குணநாதன் 03-10-11 அன்று இந்தியா சென்னையில் நடந்த மோட்டார் சயிக்கிள் போட்டியில் முதல் இடங்களை பெற்றார். இந்த வெற்களை தொடர்ந்து THAILAND போட்டியில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கும் போய் வெற்றிபெற்று அவரது பெற்றோருக்கும், மயிலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
இந்தியா கோயம்புத்தூரில் 03-07-2011 அன்று நடந்த YZF-R15 ONE MAKE RACE பந்தயத்தில் மீண்டும் செல்வன் மதன் சற்குணநாதன் முதலாவது இடத்தை பெற்று மயிலிட்டிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியா சென்னையில் 3, 4, 5 - 06 – 2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற
FMSCI NATIONAL MOTORCYCLE CHAMPIONSHIP 2011 நாலு போட்டிகளிலும் இந்தியர்களுடன் போட்டியிட்டு போட்டியிட்ட நாலிலும்
செல்வன் மதன் சற்குணநாதன் முதலாவது இடத்தைப்பெற்று மீண்டும் எமது மயிலிட்டிக்கு பெருமை சேர்த்துள்ளார், மதனின் அப்பா திரு சற்குணநாதன் இறைவனடி சேர்ந்து இரண்டு மாதம்கூட முடியவில்லை இந்த துயரமான நேரத்திலும் இவர் இந்த போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றதிற்கு காரணம் அப்பாவின் ஆசிர்வாதம்தான். ஏனென்றால் மதன் அப்பாவின் செல்லக்குட்டி, அடுத்து JULY இல் நடக்கும் மற்றும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று பெற்றோருக்கும் எம்மண்ணுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
மயிலிட்டியில் பல வீரர்கள் வாழ்ந்த வரலாறு உண்டு அந்த வரிசையில் கனடாவில் இளம் வயதில் செல்வன் பாவலன் ஜெயறட்ணம்,
செல்வன் அனார்த்தன் ஜெயறட்ணம் இருவரும் BLACK BELT எடுத்து எமக்கு பெருமைசேர்த்துள்ளார்கள். இவர்கள் இந்த தரத்தை பெறுவதிற்கு
திருமதி உமை ஜெயறட்ணம் அவர்களின் கடின உழைப்பு அளப்பெரியது அவருக்கு மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
மயிலிட்டி மண்ணிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர் வயதில்குறைந்தவர். பல வருடங்களாக பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களோடு போட்டி போட்டு முன்னணியில் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் எமது கிராமத்தவர் என்று நாம் சொல்லும் அளவுக்கு எமக்கு பெருமை சேர்த்துள்ளார், இவர் மேலும் பல வெற்றிகளைப்பெற்று பெற்றோருக்கும் மயிலிட்டிக்கும் பெருமை
சேர்க்க வேண்டும் என்று மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
SATKUNANATHAN MATHAN
1ST PRIZE - YAMAHA RACING RIDETECH CHALLENGE ON 20TH SEP 2009 IN COYAMUTHTHUR
2ND PRIZE .................................................. ON 13TH DEC 2009 IN CHENNAI
1.Lanka Lions Sports club 12th Senior & 11th Junior Athletic Championship 2010 - Gold Medal
2.National Youth Sports Festival 2010 – Gold Medal
3.Sir John Tarbat Senior Championship – 2010 – Gold Medal
4.6th Red Cross National Youth Athletic Championship – 2010 – Gold Medal
5.Junior National Championship 2010 - Gold Medal
6.All Island School Games – 2010 – Gold Medal
7.XXXVI (36th) National Sports Festival 2010 – Silver Medal
8.2008 அகில இலங்கை விளையாட்டுப்போட்டியில் தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.
9.2007 அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
செல்வன் ஹரிகரன் வடிவேஸ்வரன் தட்டெறிதலில் 2007 முதல் 2010 வரை பல தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார். அந்நாளில் திரு வடிவேஸ்வரன் அவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர் என்பதும் யாவரும் அறிந்ததே, புலிக்குப்பிறந்தது பூனையாகுமா என்பதற்கு அமைய ஹரிகரன் அவரின் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் மேலும் பல சாதனைகளைப்பெற்று பெற்றோருக்கும் மயலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.