மயிலிட்டி டொட் கொம் அங்கத்துவப்பணமாகவோ, ஒவ்வொருமாதம் சிறு தொகையாகவோ, மற்றும் வேறு தேவைகளைச் சொல்லி மயிலிட்டி மக்களிடம் பணம் கேட்டு வேண்டுவதில்லை, மக்கள் தாமக முன்வந்து பங்களிப்பு வழங்குவதை மட்டும் ஏற்றுக்கொள்கொள்கின்றது. மயிலிட்டி டொட் கொம் மயிலிட்டி மக்களுக்கு பண உதவிசெய்தல் மற்றும் அனைத்து செலவுகளும் உட்பட, பொறுப்பாளர்களின் பங்களிப்பில் நிர்வகிக்கப்படுகின்றது அன்பதை அறியத்தருகின்றோம். நன்றி மயிலிட்டி டொட் கொம்

____________________________________

மயிலிட்டி டொட் கொம் வாசகர்களுக்கு

எமக்கு அனுப்பப்படும் EMAIL கடிதங்கள் தேவை ஏற்படின் மக்கள் பார்வைக்காக போடப்படும் என்பதை அறியத்தருகின்றோம். எமக்கு அனுப்பப்படும் EMAIL கடிதங்கள், ஆக்கங்கள் அனைத்திற்கும் அனுப்புபவர்களே பொறுப்பானவர்கள் மயிலிட்டி டொட் கொம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்கமாட்டாது. மற்றவர்களை பாதிக்கும் என்று நினைக்கும் எதையும் போடாமல் விடவோ அகற்றவோ மயிலிட்டி டொட் கொம்மிற்கு முழு உரிமையும் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

எம்மையும் மீறி எமக்குத்தெரியாமல் ஏதாவது தவறு நாம் விட்டிருப்பின் அதை சுட்டிக்காட்டுவதிற்கு மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் முழு உரிமையும் உண்டு, அப்படி நீங்கள் செய்யுமிடத்து நாங்கள் மிகவும் சந்தோசத்துடன் எம்மைத்திருத்திக்கொள்வோம்.

நன்றி மயிலிட்டி டொட் கொம்

____________________________________

மயிலிட்டி ஒன்றியம் முதன்முதல் 2005ம் ஆண்டு ஆரம்பித்தது முதல் 2008 வரை திரு ஜெயறட்ணம் சற்குணநாதன் (ஜெயா) செயலாளராக கடைமையாற்றினார் அவரின் கடின முயற்சியாலும் அவரது துணைவியாரின் ஒத்துழைப்பாலும் ஜெயறட்ணம் ஒன்றியத்தை மிகவும் முன்னேற்றமடையச்செய்தார். மயிலிட்டியைச் சேர்ந்த எல்லோரையும் முதன்மைப்படுத்தி செயற்படவேண்டும் என்று ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார். ஆனால் ஒரு உயர்ந்த மனிதரால் அவருக்கு கிடைத்த பட்டம் மயிலிட்டி ஒன்றியத்தை நாசமாக்கிவிட்டான் என்று. இதில் கவலைக்குரியது என்னவென்றால் திரு ஜெயறட்ணம் மயிலிட்டி ஒன்றியத்தின் அடிப்படை அங்கத்தவர் உரிமையிலிருந்து விலகிவிட்டார் தனது அங்கத்தவர் பத்திரத்தை திருப்பி உடனடியாக அனுப்பவும் சொல்லிவிட்டார் தனக்கும் ஒன்றியத்திற்கும் எனிமேல் எந்தவித தொடர்பும் இல்லை என்று. ராஜபக் ஷா குடும்பம் ஆட்சி செய்ததுபோல்தான் சங்கத்திலும் ஆட்சி நடக்கின்றது.

ஜெயறட்ணத்திற்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு ?

பாவம் நல்லவர்கள் ?


மயிலிட்டி மக்களிற்கு


எமது இணையத்தளத்திற்கு வந்த கடிதத்தை பாருங்கள். நாம் அவர்களின் தனிப்பட்ட படங்கள் எதையும் போடவில்லை பொது நிகழ்ச்சிகளில் எடுத்த படங்களைத்தான் போட்டோம். இவர்களின் இப்படியான செயல்களால் மயிலிட்டி மக்கள் இவர்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் வற்புறுத்தலுக்கமைய சில படங்களில் உள்ள அவர்களை மட்டும் மிகவும் மனவருத்தத்துடன் மறைப்பு செய்கின்றோம்.

நாம் ஆங்கில அறிவு இல்லாமல் இத்தனை உலகநாடுகளில் பார்க்கும் அளவிற்கு இந்த இணையத்தளத்தை செயற்படுத்தவில்லை.


இது சாதி மதம் குறிச்சி தெரு மேல் கீழ் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து நாடுகளிலும் வாழும் மயிலிட்டி மக்களிற்காக ஆரம்பிக்கப்பட்டது இது உங்களின் இணையத்தளம்.